Monday, February 18, 2019

கேள்விக்குறிகள் - ???


என் கல்லூரி ஜூனியர் /அன்புத்தம்பி சொக்கலிங்கம் சற்று வித்தியாசமான பிறவி.புல்வாமா தாக்குதலுக்கு நாம் மெழுகுவர்த்தி ஏற்றி கொண்டும் , watsappயில் jaihind மெசேஜ் forward  செய்து கொண்டும்,ஒரு குறிப்பிட்ட மதத்தை குறை சொல்லி கொண்டும் இருந்த நேரத்தில்,அரியலூருக்கு நேரில் சென்று,கார்குடியை சேர்ந்த ராணுவ வீரர் சிவச்சந்திரனுக்கு இறுதி மரியாதை செலுத்தி திரும்பியுள்ளார்.அவர் அனுப்பிய நெஞ்சை நெகிழ வைக்கும் சில படங்கள் இதோ.

சிவச்சந்திரனின் தந்தை மற்றும் முதல் மகன் ராணுவ உடைகளில்...கட்டிய மனைவி வயிற்றில் குழந்தையுடன்..ஒரு மாற்றுத்திறனாளி தங்கை. கொடுக்கும் லட்சங்களில் எத்தனை லட்சம் அந்த குடும்பத்திற்கு போய் சேருமோ தெரியாது.எத்தனை கோடி கொடுத்தால் என்ன?பித்து பிடித்தவர் போல மகனின் உடையை அணிந்து சுற்றி திரியும் அந்த தந்தைக்கு மகன் கிடைப்பாரா? கண்ணுக்கு எதிரே நிற்கும் தன் மகனின் எதிர்காலமே கேள்விக்குறி ஆகி இருக்கும் தருவாயில் வயிற்றில் ஒன்றை சுமர்ந்து கொண்டு அமர்ந்திருக்கும் அந்த பெண்ணின் மனநிலை?வாய் பேச வராத மற்றும் காது கேட்காத ,அண்ணனையே நம்பி இருந்த அந்த தங்கையின் நிலைமை?
 உயிரோடு இருந்தும் திராணியற்று சக்தியற்று  குனிந்த இவர்களின்  வாழ்க்கையும்  இனி கேள்விக்குறிகள் தானா ?

No comments:

Post a Comment