சாப்பிட சென்றிருந்த இடத்தில்,பக்கத்து டேபிலில் இரண்டு பேர்.
கிராமத்தில் இருந்து வந்து இருக்கும் அம்மாவும்,
சென்னையில் வேலை பார்க்கும் ஏழை பையனும்.
'அம்மா,இங்க மட்டன் பிரியாணி தான் ஃபேமஸ்,அதையே சாப்பிடு', என்றான் அந்த பையன்.
ஒரு மட்டன் பிரியாணி,ஒரு குஸ்கா என்றான் வெயிட்டரிடம்,
பரிமாற பட்டது.
இருவரும் பேசி கொண்டே இருந்தனர்.ஆஃபீஸ் கதை,கிராமத்து
கதை ஓடிகொண்டே இருந்தது.
பேச்சு கொடுத்து கொண்டே அம்மா தன் தட்டில் இருந்த
மட்டன் பீஸ் அனைத்தையும் ஒன்றொன்றாக பையன் தட்டில்
வைத்தாள்.
இருக்கும் காசில் தனக்கு குஸ்கா சொல்லி,அம்மாவுக்கு
மட்டன் பிரியாணி சொன்ன பையனை ரசிப்பதா?
மட்டன் பிரியாணி முன்னிறுந்தும் மகனுக்காக குஸ்கா
சாப்பிட்ட அம்மாவை ரசிப்பதா?
அம்மா-பையன் combo முன்பு பிரியாணி கூட தோற்று விடுகிறது.