Sunday, May 22, 2011

பூ பூக்கும் மாசம்




Balcony யில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.கொளுத்தும் வெயிலிலும் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர்.எனக்கு மட்டுமில்லை,எல்லோருக்குமே பள்ளி நாட்களில் மிகவும் இனிமையானது கோடை கால விடுமுறை நாட்களாக தான் இருக்க முடியும்.புதுப்புது இடங்கள்,புதுப்புது விளையாட்டுக்கள்,புதுப்புது நண்பர்கள் நமக்கு அறிமுகமாகின்றனர்.

ஒவ்வொரு முறையும் தவறாமல் சிதம்பரத்தில் உள்ள தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்றுவிடுவோம்.அமைதியான சூழலில் அழகான வீடு,வீட்டை சுற்றி தோட்டம்,வாசலிலேயே வரவேற்கும் கலர் கலர் போகன்வில்லா.மாமாக்கள், சித்தி என்று அனைவரும் வந்து விடுவர்.நாங்கள் மொத்தம் 9 cousins.எத்தனை பேர் வந்தாலும் சமைத்து அசத்துவதில் என் பாட்டி தான் benchmark. அதை நோக்கி அவரின் மகள்களும் மருமகள்களும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.அப்படிப்பட்ட மீன் குழம்பை இது வரை யாரும் செய்த பாடில்லை.ஒரு தட்டு சாதத்திற்கு ஒரு ஸ்பூன் குழம்பு போதும்.thickness,கலர்,காரம்,உப்பு எல்லாமே perfect.மீன் குழம்பு மட்டுமில்லை,ஒரு பீன்ஸ் பொரியல் செய்தால் கூட அதை அவ்வளவு ரசித்து ஸ்டைல் ஆக வெட்டி சமைப்பார்.அவரிடம் தான் கற்று கொண்டேன் சமைப்பதற்கு முக்கிய ingredient 'ரசனை' என்று.வீட்டிலிருக்கும் போதெல்லாம் ஊட்டிவிட்டால் கூட சாப்பிட அழும் நாங்கள்,பாட்டி வீட்டில் மட்டும் போட்டி போட்டு கொண்டு சாப்பிடுவோம். ஒன்றாக தான் எழுவோம்,விளையாடுவோம்,சாப்பிடுவோம்,சுத்துவோம்,தூங்குவோம்.Cousins are your very first friends.... யாரவது மறுக்க இயலுமா?

காலை சீக்கிரமே எழுந்து கொண்டாக வேண்டும்.டிகாசன் காபியை ரசித்து குடித்து விட்டு ,பல் விளக்கி கொண்டே தோட்டத்தில் உள்ள தக்காளி,மிளகாய்,கத்திரிக்காய்களை எண்ணி கொண்டே மாந்தோப்பிற்கு செல்வோம்.அங்கே உள்ள தண்ணீர் தொட்டியில் விளையாடுவோம்.அதில் பாதி நனைந்த நாங்கள் தோட்டத்திற்கு தண்ணீர் அடிக்க வைத்து இருக்கும் tube யில் விளையாடுவோம்.முடிந்தது குளியல்.பூஜைக்காக செம்பருத்தி பறித்து கொடுப்போம்.செம்பருத்தி தோட்டத்தில் எப்போதுமே சிவப்பு கலரும்,வெள்ளை கலரும் இருக்கும்.எப்போதாவது பிங்க் கலரும்,மஞ்சள் கலரும் பூக்கும்.

பொழுதுகள் சற்று சீக்கிரமாகவே கழிந்து விடும் விடுமுறை நாட்களில்.அடிக்கடி calender பார்த்து கொள்வேன்.கூடவே பள்ளியில் கொடுத்த assignment பயமுறுத்தும்.ஊருக்கு போய் முதல் ஒரு வாரம் ஸ்கூல் க்கு லீவ் போட்டுட்டு அந்த ஒரு வாரத்தில் assignment முடிக்கலாமா என்று ஒவ்வொரு முறையும் plan போட்ட என்னை நினைத்து நானே சிரித்து கொள்வேன்.

அவ்வப்போது எங்களது தாத்தா செல்லமாக மிரட்டுவார்,அவரது மிரட்டல்கள் பேரன்களுக்கு மட்டும் தான்.பேத்திகள் ஐஸ் வைத்து தப்பித்து விடுவோம்.எங்களை entertain பண்ண அவ்வப்போது deck க்கும் புது படங்களும் ஆளை விட்டு எடுத்து வர சொல்லி போட்டு காண்பிப்பார்.Family Pack ஐஸ்கிரீம் வாங்கி தருவார்.மாலை நேரங்களில் தெருகோடியில் உள்ள மண்முட்டில் எல்லோரும் விளையாட சென்று விடுவர்.நான் மட்டும் வீட்டு வாசலில் உள்ள அந்த மஞ்சள் பூக்களை ரசித்து கொண்டிருப்பேன்.வெளிர்ந்த பச்சை நிற இலைகளின் ஆங்காங்கே தெரியும் அந்த மஞ்சள் பூக்களின் பெயர் கொன்னப்பூ .இப்போது அந்த பூக்களை எங்கேயாவது பார்த்தால் கூட பால்யத்தை நோக்கி ஓட துவங்கும் மனது.

நாங்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பது 'சித்ரா பௌர்ணமி'.வீட்டில் ஒரு நாட்டியாஞ்சலியே நடக்கும்.ஒரு வாரத்திற்கு முன்பே rehearsal ஆரம்பித்து விடுவோம்.ஆடி களைத்த எங்களை boost up செய்வது 'Rasna'.கையில் எழுதி கலர் செய்த invitationகள் கொடுக்கப்படும்.கூடவே பணமும் வசூலிக்கப்படும்.இந்த நிகழ்ச்சிக்கு எப்போதுமே தலைமை தாங்குபவர் 'எங்கள் தாத்தா' தான்.இதை காரணம் காட்டி அதிக பணம் பிடுங்கி விடுவோம்.'சித்ரா பௌர்ணமி' அன்று dance program முடிந்த பிறகு எல்லோரும் ஒன்றாக 'சித்ரா அன்னம்' சாப்பிடுவோம்.

விவரிக்கவும் விவாதிக்கவும் இன்னும் பல..விடுபட்டவைகளில் இதோ சில..

தாத்தாவும் கூட்ஸ் வண்டியும்,பெட்டி கடை chik shampoo ஷாப்பிங்,சிவபுரி ரோஜாக்கள், மடப்பள்ளி பிரசாதம்,அவ்வாவின் மாங்கா தொக்கு ,சீசர் நாய்,fan சண்டை ,கிரிக்கெட் hero வும் அவரின் ரசிகர்(கை)களும் ,fridge யில் வைத்த வெள்ளரி பழம்,2808,

சொல்லி கொண்டே போகலாம்.ஒவ்வொரு முறையும் ஊர் திரும்பும் போதும் காசு தருவார் தாத்தா.அதை விட இரு மடங்கு காசு ஏற்கனவே தந்து இருப்பார் பாட்டி.இந்த அன்பு ஒன்று மட்டுமே என்றைக்குமே மாறாத அழகான நினைவுகளை தருகிறது.நினைவுகளை விட சிறந்த பரிசு எதுவாக இருக்க முடியும்? என் குடும்பத்தினருக்கு பரிசளிக்கிறேன் இந்த நினைவுகளை....

Sunday, May 8, 2011

தாயுமானவள்


அன்னையர் தினம் இன்று.Facebook யிலும் SMS யிலும் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருந்தன.தொலைக்காட்சி யிலும் அம்மா பாடல்கள் ஒளிபரப்பு ஆகி கொண்டிருந்தது.ரசித்து கொண்டிருந்தேன் நான்.என் வீட்டு பணிப்பெண் உள்ளே நுழைந்தாள்.வழக்கத்திற்கு மாறாக இன்று சுறுசுறுப்பாக வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.மெதுவாக பேச்சு கொடுத்தேன்.

நான்: என்ன எங்கயாச்சும் வெளில போறியா?

அவள்: இல்ல அக்கா.சனி ஞாயிறு மட்டும் அடுத்த தெருல ஒருத்தோங்க வேலைக்கு கூப்டு இருகாங்க.அதான் போலாம் னு ...

நான்: ஹ்ம்ம் ஏற்கனவே நெறைய வீட்ல வேலை செய்ற.இது வேறயா?

அவள்: என் பொண்ணு டிவி ல வர்ற பாட்டெல்லாம் நல்லா பாடுதுனு பாட்டு கிளாஸ் ல சேத்து விட்டு இருக்கேன் கா.அதனால தான் கா போறேன்.அவ அப்பா உயிரோட இருந்தா இதெலாம் செஞ்சு இருப்பார்னு அவ நெனச்சுட கூடாது பாருங்க...

நான்:சரி சரி இந்த இட்லி ய சாப்டுட்டு வேலைய பாரு.

அவள்:அக்கா என் பையன் லீவ் ல வீட்ல தான் இருக்கான்.எதாச்சும் தின்ன கேட்டுட்டே இருப்பான். Box ல எடுத்துட்டு போறேன் கா.அவன் சாப்டுவான்.

தோற்று விட்டேன் அந்த பெண்ணிடம்.அதுவரை அன்னையர் தின கேளிக்கைகளை ரசித்து கொண்டிருந்த நான்,முதன் முறையாக உணர்வுடன் பார்க்க ஆரம்பித்தேன்.குழந்தைகளுக்காக தன் உழைப்பையே பரிசாக தரும் அந்த தாய் உண்மையில் ஒரு super mom தான்.