Saturday, February 9, 2019

அன்பே சிவம்


அவர் என் மகளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் ஆசிரியையாய் இருந்தவர்.அன்பான சிரித்த முகத்துடன் பழக கூடியவர்.ஒவ்வொரு குழந்தையையும் தன் குழந்தை போல எண்ணுபவர்.இன்றும் தினமும் அவரை சென்று சந்திக்க கூடிய பழக்கம் என் மகளுக்கும் அவள் தோழர்களுக்கும் உள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.குழந்தைகளை சுண்டி இழுக்கும் சக்தி அன்பிற்கு மட்டுமே உள்ளது என்பதற்கு பொருத்தமான உதாரணம் அவர்.அவருக்கு ஒரு மகள் உண்டு.ஆறு வயது.அடிக்கடி watsapp statusயில் அந்த குழந்தையின் படங்களை பார்த்திருக்கிறேன்.சில தினங்களுக்கு முன் கூட மாறுவேட போட்டியில் பரிசு வாங்கி இருந்தாள்.சற்றும் எதிர்பாரா விதமாய்  கடந்த வாரம் அவளுக்கு blood cancer என தெரிய வந்தது.கடவுளிடம் நிறைய கேள்விகள் கேட்க தோன்றியது.'குடித்துவிட்டு ரோட்டில் கிடப்பவன் நல்லா இருக்கான்,பொண்ணுங்கள rape பண்றவன் நல்லா இருக்கான்.ஊரை ஏமாத்தி கோடியில் புரளுபவன் நல்லா இருக்கான் ஏன் கடவுளே இந்த பிஞ்சுக்கு இந்த சோதனை ? ' 'ரொம்ப நல்லவங்களா இருக்கவே கூடாதா ?இப்படி தான் சோதிப்பாயா ' என பல கேள்விகள் மனதிற்குள்.இன்னமும் ஓடி கொண்டு தான் இருக்கின்றன.Negativity அதிகரித்தது.இது ஒரு அத்தியாயம்.இந்த அத்தியாயத்தில் கடவுளிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருந்தால் கூறுங்கள்.
என்னை ஆச்சர்ய பட வைத்த அடுத்த அத்தியாயம் இது.Milaap பற்றி எல்லோரும் அறிந்து இருப்பீர்கள்.ஒரு நிதி திரட்டும் நிறுவனம்.நான் அதில் இருந்த linkயை fb,watsappயில் share மட்டும் தான்  செய்தேன்.என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலர்  தங்களால் இயன்ற பங்களிப்பை அனுப்பி இருந்தனர்.நாடு,மொழி ,மதம் என எல்லாமே வெவ்வேறாக இருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும் இருந்த அந்த உதவும் மனப்பான்மை கண்டு நான் வியப்படைந்தேன். எனக்கோ தெரிந்த ஒரு நபரின் குழந்தை. ஆனால் அவர்களுக்கு?முகம் தெரியாத ஒரு குழந்தை.எதையும் எதிர்பாராமல் உதவ இத்துணை நல்லுள்ளங்கள் இருக்கிறார்களா ?இதுவரை நான் எனக்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே என்னால் முடிந்த உதவியை செய்து இருக்கிறேன்.ஆனால் இவர்கள் ? என்னை சூழ்ந்திருந்த negativity positive ஆக மாற தொடங்கியது.நாம் நல்லவர்களாக இருந்தால் கண்ணுக்கே தெரியாதவர்கள் கூட நமக்கு உதவி செய்வார்கள் என்று தோன்றியது.இப்படிப்பட்ட நல்லுள்ளங்களின்  பிரார்த்தனையால் அந்த வலிகளை எல்லாம் தாங்கி  கொண்டு மிக விரைவில் சிறகடித்து பறந்து நம்மை ஆனந்த பட வைப்பாள் அந்த பாட்டாம்பூச்சி.இனி வரும் காலங்களில் எல்லோருக்கும் நிறைய உதவிகள்  செய்ய வேண்டும் என்று என்னை உணர வைத்த ஒரு நிகழ்வு இது.


No comments:

Post a Comment