ஞாயிறு காலை திருவேற்காட்டிற்கு சென்று கொண்டிருந்தோம்.வழி நெடுக போஸ்டர்களும் banner களும் வரவேற்றன.பழம் பெரும் நடிகர் ஒருவரின் வீட்டு திருமண விழா நடந்து கொண்டிருந்தது.முதலமைச்சர் உட்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு.காரின் உள்ளே இருந்து எட்டி பார்த்து கொண்டே சென்றேன்.மண்டப செட்டிங்காக மட்டும் சில பல ஏக்கரை வளைத்து போட்டிருந்தனர்.ஒரு நவீன அரண்மனை போல காட்சியளித்தது அந்த மண்டபம்.கண்களுக்கு தென்பட்ட இவற்றை தவிர மற்ற மேடை அலங்காரம்,மணப்பெண் புடவை,நகைகள்,மேக்கப்,பிரபலங்கள் வருகை,தடபுடல் சாப்பாடு போன்றவற்றை நானே கற்பனை செய்து கொண்டிருந்தேன்.கோவில் வந்ததே தெரியாமல் costly கற்பனையில் மூழ்கி இருந்த என்னை தட்டி எழுப்பினார் என் கணவர்.ஏதோ ஒரு உணர்வு என்னை முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தது.பொறாமை?ஏக்கம்?பிரம்மிப்பு?ஆசை? சொல்ல தெரியவில்லை.எல்லாம் கலந்த ஒரு புது விதமான எண்ணம்.அந்த திருமண விழாவை தாண்டி வந்ததன் வினை.என் கணவரிடம் அந்த திருமணத்தை பற்றியே பேசி கொண்டிருந்தேன்.முகூர்த்த நாள் என்பதால் சிறப்பு தரிசன வரிசையிலும் நிரம்பி வழிந்தது கூட்டம்.கோவிலில் கிட்ட தட்ட 20 திருமணங்கள் நடக்க இருப்பதாக வரிசையில் நின்றோர் பேசி கொண்டிருந்தனர். பூசாரி, ஒரு மணபெண் கையில் இருந்த முகூர்த்த புடவையும்,தாலியையும் அம்மன் காலில் வைத்து பூஜித்து கொடுத்தார்.முகூர்த்த நேரம் நெருங்குவதால் அதை வாங்கி கொண்டு ஓடினாள் அந்த பெண்.காதில் ஜிமிக்கி,கழுத்தில் ஒரு செயின்,கை நிறைய கண்ணாடி வளையல்கள்,தலை நிறைய மல்லிகை மற்றும் கனகாம்பர பூக்கள்.
Platinum வைர நகைகள்,முகபூச்சு,உதட்டு சாயம்,என்று ஏகப்பட்ட விடுபட்ட வித்தியாசங்கள் என் கற்பனை costly மணப்பெண்ணுக்கும்,இவளுக்கும்.ஆனாலும் கற்பனையில் வந்தவளை கலைத்து விட்டு போட்டியில் ஜெயித்து விட்டு சென்றிருந்தாள்.அம்மனை தரிசித்து பிரகாரம் சுற்றி கொண்டிருந்தோம்.திருமண கெட்டி மேள ஓசை விடாமல் கேட்டு கொண்டே இருந்தது.ஒரு வழியாக parking இடத்திற்கு வந்தோம்.அங்கே ஒரு மரத்தடியில் ஒரு திருமண கோஷ்டி சாப்பிட்டு கொண்டிருந்தனர்.மொத்தமே பத்து பேர்,பக்கத்திலேயே இரண்டு share auto,ஒவ்வொருவர் கையிலும் ஒரு தட்டு,சப்பாத்தியும் தேங்காய் துவையலும்.மண மக்கள் கையிலும் அதே தான்.அங்கிருந்த ஒருவர் மணமகனை ஊட்டி விட சொல்ல மணப்பெண் சிரித்து முகத்தை திருப்பி கொண்டாள்.ரொம்ப அழகான காட்சி அது.அந்த நவீன அரண்மனை யை விட பன்மடங்கு அழகு.சொல்ல தெரியாத அந்த துஷ்ட எண்ணங்களை அழித்த 'எளிமை'க்கு நூறு நன்றிகளை மனதிற்குள் தெரிவித்து கொண்டு,மெல்ல என் கணவரிடம் கூறினேன்..'ஏங்க எப்படி கல்யாணம் பண்ணினா என்னங்க,வாழ போற இரண்டு பேரும் வாழ்த்தர இதயங்களும் தான் முக்கியம்' என்று. புரிஞ்சா சேரி வண்டில ஏறு என்பது போல புன்னகைத்தார் அவர்.Costly கனவு கலைந்து இதயத்தின் கணம் குறைந்திருந்த நிம்மதியுடன் அமர்ந்தேன்.