Tuesday, August 14, 2012

இருள்கள் நிழல்களல்ல...



கோயம்பேடு என் வீட்டில் இருந்து கிண்டியில் உள்ள அலுவலகத்திற்கு 

சென்று கொண்டிருந்தேன்.வீட்டில் இருந்து கிளம்பும் போதே 

எதிரில் குப்பை வண்டியை தள்ளி கொண்டே ஒரு ஆணும் பெண்ணும் வந்து 

கொண்டிருந்தனர்.அந்த வண்டியிலேயே ஒரு சிறிய 

தொட்டி அதில் அவர்களின் குழந்தை தூங்கி கொண்டிருந்தது.பார்த்து 

கொண்டே கோயம்பேடு மேம்பாலத்தை வந்தடைந்து 

ஏறுகையில் கீழே உள்ள திறந்த வெளியில் சுமார் முப்பது பேர்.டிராபிக் யில் 

புத்தகம்,விசிறி,இதர பொருட்கள் விற்பது அவர்கள் 

தொழில்.அந்த திறந்த வெளி தான் அவர்களின் 

சமையலறை,படுக்கையறை,கழிப்பிடம்..எல்லாமே ஒரே இடத்தில்...arun excello 

விளம்பரத்தில் வருவது போல..எல்லாமே ஒரே இடத்தில்..காண  

பொறுக்கவில்லை...நூறு அடி ரோடு முழுவதும் மெட்ரோ ரயில் 

வேலை.இங்கிருக்கும் தொழிலாளிக்கு 350 ௦ ரூபாய் தின கூலி கட்டுபடி 

ஆகாததால் பீகார் மாநில மக்களுக்கு ரூபாய் 100 தந்து வேலை 

வாங்கி கொண்டிருக்கிறார்கள்.இந்த நூறு ரூபாயில் சாப்பிட்டு சேமித்த பணம் 

இவர்கள் குடும்பத்திற்கு..அசோக் நகரை தாண்டும் 

போது திரும்பவும் ஒரு திறந்த வெளி.சில குறவ மக்கள்.நான்கு  பூட்டப்பட்ட 

கடைகள்.௦ வாசலிலேயே மூட்டை முடிச்சுக்கள்,அடுப்பு,சமையல்.மனதில் 

ரணத்துடன் கடந்து கொண்டிருந்தேன் சைதாபேட்டை பாலத்தை.மூடி 

இருக்கும் காரின் உள்ளே என் மூக்கை மூட வைக்கும் அதீத துர்நாற்றம் வீசும் 

குப்பை மண்டி.குப்பைகளை தள்ளி கொண்டிருந்தனர் சிலர்,குப்பைகளை 

ஒருமித்தபடி கிரேனை இயக்குகிறார் ஒருவர்.அருகிலேயே பல வீடுகள்.பொது 

கழிப்பிடம்.அதன் வாசலிலேயே தோசை வியாபாரம் 

செய்யும் பெண்.கிண்டியை சென்றடைந்தேன்.
    

எத்தனை கஷ்டங்கள் .....நமக்கும் கீழே உள்ளவர் கோடி என நினைத்து பார்த்து 

நிம்மதி நாட முடியவில்லை.நமக்கு மேல் 

உள்ளவர்களை நினைக்கவே தோன்றவில்லை.பத்து தலைமுறைக்கு சொத்து 

சேர்த்து கொண்டு,பப்ளிசிட்டிக்கு ஒரீரு உதவி 

செய்பவர்கள்.மத்திய அரசுக்கு ஜனாதிபதி போட்டி,இலாகா மாற்றத்திற்கு தான் 

நேரம் சரியாக இருக்கிறது.மாநில அரசு இலவச 

பொருள் விநியோக விரும்பி,சாப்பாடிற்கே வழி இல்லாதவர்களுக்கு இலவச 

டிவி,லேப்டாப் தருவது அவர்களின் பொழுது 

போக்கு.சினிமாகாரர்களின் NGO களின் நிலை பற்றி கருத்து கூற 

விரும்பவில்லை.படித்த அரசியல்வாதிகளை கை விட்டு 

எண்ணிவிடலாம்.அவர்களால் இந்நாட்டில் ஏற்பட்ட மாற்றத்தை எண்ண 

முடியாது.ஏனெனில் எந்த மாற்றமும் நிகழவில்லை.ஆனால் நம்மால் நிச்சயம் 

ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வர முடியும். 



தேவையற்ற எந்த பொருளும் வீட்டில் இருக்க கூடாது.நமக்கு அவசிய  

படாதது அவர்களுக்கு அத்தியாவசியம் 

ஆகலாம்.இறந்தவர்களின்  நினைவஞ்சலிக்கும்,பிறந்த நாள் விழாக்களுக்கும் 

banner வைப்பதை விட்டுவிட்டு பத்து பேருக்கு சாப்பாடு 

வாங்கி தரலாம்.இப்படி எத்தனையோ 

செய்யலாம்.பிச்சை அளிக்க வேண்டாம்.பகிர்ந்து கொள்ளலாம்.மனித நேயம் 

ஒரு சாதாரணமான ஒருவிஷயம்,சாதனை 

அல்ல.இயல்பாக இருக்க  வேண்டிய ஒன்று,அதை நம் வழக்கம் ஆக்கி 

கொள்ளவோம். 

இந்தியா நிச்சயம் ஒரு நாள் விடுதலை பெரும்,வறுமையில் இருந்து.


Friday, May 18, 2012

குரு பெயர்ச்சி


குரு பெயர்ச்சி - 17.05.2012

கடந்த ஒரு பத்து நாளாக என் வீடு சுற்றி இருக்கும் தெருவெங்கும் ஒரு மஞ்சள் தாள் வட்டம் அடித்து கொண்டிருந்தது.அது குரு பெயர்ச்சி பரிகார பலன் மற்றும் கட்டண விவரங்கள்.அதில் இருக்கும் பன்னிரண்டு ராசிகளில் பத்து ராசிக்கு பரிகாரம் உண்டு என்றும், குறைந்த பட்ச கட்டணம் ரூபாய் 125 என்றும் குறிப்பிட பட்டு இருந்தது.நான் போட்ட குறைந்த பட்ச கணக்கில் வந்த லட்சங்கள் சில.இப்படி பல கோவில்கள்..பல மஞ்சள் தாள்கள்...

நான்கைந்து தடவை வந்து கேட்டும் அந்த குறைந்தபட்ச கட்டணத்தை கூட நான் குடுக்கவே இல்லை.என் பரிகாரத்தை சற்று மாறுதலாக செய்தேன். அதே கட்டணத்தில் பென்சில்,நோட்டு புத்தகங்கள் வாங்கி என் வீட்டில் வேலை பார்பவரின் குழந்தைகளுக்கு குடுத்து விட்டேன்.இந்த 'MODERN' பரிகாரத்திற்கு 'SELF SATISFACTION' இலவசமாக  கிடைத்தது.

அந்த மஞ்சள் தாளுக்கு மொய் எழுதியவர்களுக்கு சொல்லி கொள்வது இது தான்..
காலம் மாறி விட்டது.ஆன்மிக 'ஆதின' போலி சாமியார்கள் மற்றும் இப்படி அரசு கோவில்களுக்கே காசு collect செய்யும் ஆசாமிகள் என்று பலர் கிளம்பி  விட்டனர்.மாறாமல் இருப்பது கடவுளும்,நம் பக்தியும் தான்.நாம் உழைத்த காசு இன்னொரு உழைப்பாளிக்கு தான் போய் சேர வேண்டும்.

இதோ என் கனவு குரு பெயர்ச்சி பரிகார பலன்:

ராசி வாரியாக அல்ல...காசு வர்க்கத்தின் வாரியாக... 

பெரும் பணக்காரர்கள் : இலவச ஸ்கூல் ஆரம்பிக்கவும்.

பணக்காரர்கள் : நான்கு நன்றாக படிக்க கூடிய மாணவர்களை படிக்க வைக்கவும்.

நடுத்தர ஆசாமிகள் : நோட்டு புத்தகங்கள் வாங்கி குடுக்கவும்.  படித்தவர்கள் ஓரிரண்டு குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லி தரவும்.

நடுத்தரதிற்கும் கீழ் உள்ளோர்: தங்களின் குழந்தைகளை அவசியம் படிக்க வைக்கவும். 
-------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு 1 : காசு வைத்து கொண்டு உதவாதவன் தான் 'ஏழை'. அவன் மனிதர்கள் list யில் இல்லை.

பின்குறிப்பு 2: நான் நாத்திக பெண்மணி அல்ல :)

Tuesday, January 17, 2012

நர்த்தனமும் நவரசமும்


சென்னை எங்கள் நாட்டிய மேடை.

அனுதினம் நாங்கள் ஆடும் நாட்டியங்கள்.


அதில் கலந்திருக்கும் நர்த்தனமும் நவரசமும்.


எங்கள் நவரசம்..
....

உயர்ந்து நிற்கும் கட்டிட MALL களை கண்டு அதிசயித்து கொண்டிருக்கையில் 'ஆச்சரிய'ப்பட வைக்கிறது பறக்க இருக்கும் மெட்ரோ ரயில்கள்.


கழிவு நீர் கலந்து வழி நெடுக ஓடும் தண்ணீரில் காணாத 'அருவருப்பு' குடித்து விட்டு பாதையில் வீழ்ந்து கிடக்கும் மனிதர்கள் மீது.


ஏறும் தங்க விலை கண்டு எந்த 'பயமும்' எங்களுக்கு இல்லை.நாங்கள் மதிப்பது விலை மதிப்பற்ற சில விஷயங்களை மட்டுமே.


Ambulance என்று தெரிந்தும் வழி விடாமல் வெட்டி முறிக்க சென்று கொண்டிருப்பவர்,signalலில் கூட horn வாத்தியத்தை இசைத்து கொண்டிருப்பவர்.அதே தெருவில் சாப்பாடிற்கே வழி இல்லாத பல குடும்பங்களை வைத்து கொண்டு ,அடிக்கடி லட்சங்கள் பல செலவு செய்து நடத்தும் கோவில் திருவிழாக்கள்.தேவையற்ற வெட்டி விளம்பர போஸ்டர்கள்,bannerகள்.தேர்தலின் போது மட்டும் தலை காட்டும் வெள்ளை வேட்டி மனிதர்கள்.எங்களை 'கோபப்பட' வைக்கிற லிஸ்ட் கொஞ்சம் நீளம் தான்.


அடிக்கடி தலையில் பூச்சூடி கொள்வதில் மகிழ்ச்சி மட்டுமல்ல 'கருணை'யை உழைப்பிற்கு காண்பித்த நிம்மதியும் சேர்ந்து கொள்கிறது.


தன்மானம்,தன் குடும்பம் இவற்றிற்கு தடங்கல் வந்தால் எங்களின் 'வீரம்' நிச்சயம் வெளிப்படும்.மேற்கோளில் ஒருவர் Marinaவில் நின்று கொண்டிருக்கும் கண்ணகி.


எங்கள் பாரதியின் கொள்ளு பேரனையே ஜாதி கேட்டு சேர்த்து கொள்ளும் கல்வித்தளங்களை எண்ணி வேதனையுடன் 'வெட்க'ப்பட்டு கொள்கிறோம்.

கடவுள் எங்களுக்கு அளித்த சிறந்த ஆயுதம் 'சாந்தம்'.பயன்படுத்தும் தருணமும் அளவும் எங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறது.

நகைகளும் புடவைகளும் தரும் சந்தோஷம் நிமிடங்களுக்கு தான்..எங்கள் 'பேரானந்தம்' எங்கள் குழந்தையின் வெற்றியில் மட்டுமே.


... நாங்கள் இந்த மாநகரத்தின் தமிழச்சிகள்.