Tuesday, May 7, 2019

தேடல்...


7-5-2019

நேற்று சுட்டெரித்த வெய்யில், இன்று குளிர் குளிர் காற்று.. வாழ்க்கையும் அப்படித்தானே என்று எண்ணிக் கொண்டே ஊர் சுற்றி வர வெளியே சென்றேன்.வழியில் தென்பட்டது கடலை வண்டி.அந்த மணலோடு கடலை வறுபடும் வாசனை என் வண்டிக்கு தானாக பிரேக் போட வைத்தது.என் நினைவுக்கு வந்தார் மன்னார்குடியில் கடலை விற்கும் பாய் தாத்தா.சிடு சிடு வென இருப்பார்.சிரித்து பார்த்ததே இல்லை.நாள் தவறாமல் கடலை வாங்குவேன் அவரிடம்.சாப்பிட்டு முடித்ததும் அந்த பேப்பரில் எழுதியிருப்பதை ரசித்து படிப்பேன்.அது யாரோ ஒரு முகம் தெரியாத மாணவனின் நோட்டு புத்தகமாக இருக்கும்.செய்தித்தாளின் சில பக்கங்களாக கூட இருக்கும்.பல வண்ண செய்திகள் தென்படும்.
இதென்ன blog ல போடற அளவு பெரிய விஷயமா என்று உங்களுக்கு கேட்க தோணலாம்.நிச்சயமாக எனக்கு இந்த சின்ன சின்ன சந்தோஷங்களே பெரிய விஷயம்.
கடலை வண்டி டைன் டைன் சத்தம் கேட்டு 50 காசு 1 ருபாய் என்று தேடி எடுத்து ஓடி செல்வேன்.அந்த தேடலின் சுகமே தனி. இந்த தலைமுறைக்கு அந்த தேடுதலும் இல்லை,எதற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.அந்த தேடுதலும் காத்திருப்பும் மட்டுமே அலாதி ஆனந்தத்தை தரக்கூடியது.

இன்னும் எளிய வார்த்தைல சொல்லனும்னா ஒரு வார்த்தைக்கு 'google' பல அர்த்தங்கள் காண்பிக்கலாம்.இருந்தாலும் அந்த Lifco dictionary புரட்டும் அந்த தேடலின் சுகமே தனிகிறேன் நான்.


பின்குறிப்பு 
என் சின்ன வயசுல கவுன்சிலரா இருந்தவர், சும்மா சுத்திட்டு இருந்தவங்கலாம் இன்னைக்கு அமைச்சரா இருக்காங்க,MLA ஆ இருக்காங்க.ஆனா கடலை வித்துட்டு இருந்த பாய் தாத்தா இன்னும் கடலை தான் விக்கிறார்.Newspaper போட்டுட்டு இருந்தவர் இன்னும் Newspaper தான் போடறார்.பூ விக்கிற பாட்டி 80 வயசாகியும் பூ வித்து தான் சாப்பிடுது.