
பிறந்தது முதலே புன்னகையால் மட்டுமே பேசி கொண்டிருந்த எனக்கு மெல்ல தமிழ் மொழியை ஊட்டினாள் தாய்.அத்தை பேசினார் 'மதுரை' தமிழ்.பக்கத்து வீட்டு ரோசி ஆன்ட்டி பேசினார் 'நெல்லை' தமிழ்.வெவ்வேறு 'தமிழ்'கள் ஒரு தமிழ் ஆனது.சுந்தர தெலுங்கு தான்,என் குடும்பத்தினர் பேசுவார்கள் தான்.கேட்டு கேட்டு தலை ஆட்டியதோடு சரி,ஏனோ வாயில் நுழைய மறுத்து விட்டது.பள்ளி சென்ற போது,ஆசிரியர்கள் திணித்தனர் ஆங்கிலத்தை.பேசாவிட்டால் 'பைன்'கட்ட வேண்டிய கட்டாய ஆங்கிலம் வெறுக்கப்பட்டது எங்களால்.கல்லூரி சென்றேன்.வேற்று கிரகத்திற்கு மாற்றப்பட்டு விட்டோமோ என்ற மலைப்பு.ஒவ்வொருவரும் ஒவ்வொரு மொழி.கை கொடுத்தது ஆங்கிலம் மட்டும் தான்.மெல்ல கை கோர்த்தார்கள் அண்டை மாநிலத்தார்.தமிழுடன் மலையாளம்,கன்னடம்,தெலுங்கு சேர்ந்து கொண்டது.ஒட்டுதலும் உறசலுமாய் திராவிடம் ஜெயித்தது, என் மொழி தென்இந்திய மொழி ஆனது.'உன் மொழி எதுவானால் என்ன?எங்களுக்கு தேவை அதனினும் மேன்பட்ட உன் நட்பு' என்று என்னை அங்கீகரித்து அரவணைத்தார்கள் என் வடஇந்திய தோழிகள்.அந்த நட்பை கௌரவப்படுத்த கற்று கொண்டேன் 'ஹிந்தி'யை.தேவைப்படும் போதெல்லாம் 'ஹிந்தி' யை வெட்டி தட்டி முட்டி மோதி சற்று நீட்டி முழக்கி ஒப்பேத்தி கொள்வேன். குஜராத்தி, மராத்தி,ஒரியா வந்துவிடும்.என்னை பொறுத்தவரை 90% பெங்காலிகள் கலைநயம் மிக்கவர்களாய் இருக்கிறார்கள் என்பேன்.ஆடல்,பாடல்,பேச்சு,ஓவியம்,எழுத்து என்று ஒன்றிலாவது தங்களை specialize செய்து கொள்வார்கள்.அதனாலேயே அந்த மொழியின் மேல் எனக்கு தனி பிரியம். 'கீதாஞ்சலி' படித்து இருக்கிறேன்.ஆங்கிலத்தில் எழுத பட்டாலும் அந்த வங்காள உணர்வை நான் பல முறை ரசித்து இருக்கிறேன்.ஒரு மனதாக ஆனேன் 'இந்திய பெண்'.திருமணம் முடித்து பாண்டிச்சேரி சென்ற போது அடித்த 'பிரெஞ்சு' காற்று இன்று எனக்கு நான்கு வாக்கியங்களை கற்று தந்துள்ளது.இதை தவிர கணினி மொழிகள் ஒன்றிரண்டு,என் மகள் பேசும் மழலை மொழி,என் வயதான பாட்டியுடன் பேசிய சைகை மொழி ஆகியவைகளும் கற்றுகொண்டாகிவிட்டது.மொழிப்பாடம் எனக்கு கர்ப்பித்தது இதைத்தான் " உலகத்தில் எல்லோருமே பேசக்கூடிய பொது மொழி யை பேசு என்று.அது என்ன என்கிறீர்களா?நான் முதல் முதலாய் பேசிய மொழி.. இதயத்தின் அடியாழத்தில் இருந்து வெளிப்படும் 'புன்னகை'.
supera irukku ramya all de best.nee innum menmelum valara en vazthukkal
ReplyDeleteRomba nalla irukku ramya..
ReplyDelete-Meenakshi
very nice..
ReplyDelete