Sunday, May 8, 2011

தாயுமானவள்


அன்னையர் தினம் இன்று.Facebook யிலும் SMS யிலும் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருந்தன.தொலைக்காட்சி யிலும் அம்மா பாடல்கள் ஒளிபரப்பு ஆகி கொண்டிருந்தது.ரசித்து கொண்டிருந்தேன் நான்.என் வீட்டு பணிப்பெண் உள்ளே நுழைந்தாள்.வழக்கத்திற்கு மாறாக இன்று சுறுசுறுப்பாக வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.மெதுவாக பேச்சு கொடுத்தேன்.

நான்: என்ன எங்கயாச்சும் வெளில போறியா?

அவள்: இல்ல அக்கா.சனி ஞாயிறு மட்டும் அடுத்த தெருல ஒருத்தோங்க வேலைக்கு கூப்டு இருகாங்க.அதான் போலாம் னு ...

நான்: ஹ்ம்ம் ஏற்கனவே நெறைய வீட்ல வேலை செய்ற.இது வேறயா?

அவள்: என் பொண்ணு டிவி ல வர்ற பாட்டெல்லாம் நல்லா பாடுதுனு பாட்டு கிளாஸ் ல சேத்து விட்டு இருக்கேன் கா.அதனால தான் கா போறேன்.அவ அப்பா உயிரோட இருந்தா இதெலாம் செஞ்சு இருப்பார்னு அவ நெனச்சுட கூடாது பாருங்க...

நான்:சரி சரி இந்த இட்லி ய சாப்டுட்டு வேலைய பாரு.

அவள்:அக்கா என் பையன் லீவ் ல வீட்ல தான் இருக்கான்.எதாச்சும் தின்ன கேட்டுட்டே இருப்பான். Box ல எடுத்துட்டு போறேன் கா.அவன் சாப்டுவான்.

தோற்று விட்டேன் அந்த பெண்ணிடம்.அதுவரை அன்னையர் தின கேளிக்கைகளை ரசித்து கொண்டிருந்த நான்,முதன் முறையாக உணர்வுடன் பார்க்க ஆரம்பித்தேன்.குழந்தைகளுக்காக தன் உழைப்பையே பரிசாக தரும் அந்த தாய் உண்மையில் ஒரு super mom தான்.


8 comments: